fbpx

கொளத்தூர் தொகுதியில் மொத்தம் ரூ.70.69 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெரியார் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக மூன்று வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொளத்தூர், ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் 23 கோடியே 4 இலட்சம் …

சிவகங்கை மாவட்டம் சாமியார்பட்டி பகுதியில் நேற்று மாலை பரபரப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்ட துணை அமைப்பாளராக பணியாற்றி வந்த பிரவீன் குமார் (27) என்பவர், கொடூரமாக அரிவாளால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, பிரவீன் குமார் சாமியார்பட்டியில் தனது தோப்பில் …

ஆளுநர்கள் நம்மை தகர்க்க அனுப்பப்படுகின்றனர். நமக்கு உதவுவதற்காக அனுப்பப்படவில்லை,. சர்வாதிகாரத்துடன் நடந்து மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது., மாநில கட்சிகளின் பங்கு மத்தியில் இருந்தால்தான் சர்வாதிகாரம் குறையும் என திருச்சியில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கருத்தரங்கில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசி உள்ளார்.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த முதல்வர் ஸ்டாலினின் 72வது …

உலக நாடுகள் எதிர்த்தபோதும் தன் மக்களை நம்பி போரிட்ட தலைவர் பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு ஒரு தலைவன்; ஒரு தத்துவம்; ஒரு நோக்கம்; ஒரு கொள்கை மட்டுமே இருக்கிறது. மொழி மற்றும் இனத்தைக் காக்கும் அரசியல், வேளாண்மையை …

பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க முடியாத கையாலாகாத மாடல் திமுக அரசு என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட, உறையூர் மின்னப்பன்தெரு, பனிக்கன்தெரு, காமாட்சி அம்மன் தெரு, நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் …

திமுக மூத்த நிர்வாகியும், கடலூர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவருமான தங்கராசு காலமானார்.

கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக அவை தலைவர் மற்றும் முன்னாள் நகர மன்ற தலைவர் மற்றும் முன்னாள் நகர செயலாளர் து.தங்கராசு நேற்று காலை 6 மணியளவில் உயிரிழந்தார். இவருடைய இறுதி ஊர்வலம் இன்று காலை 10 மணியளவில் …

பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என SDPI கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், திமுக தனது கூட்டணியை தக்க வைத்து, தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. விசிக திமுக கூட்டணியில் இருந்து விலகிவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், திமுக …

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிராமங்களில் உள்ள நிலங்களின் வகைகள், விளையும் பயிர்களின் விவரம், நிலவரி விவரம், பிறப்பு, இறப்பு விவரம், முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு வழங்கும் …

சமூக வலைதள கருத்தியல் உரையாடல்களுக்காக நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்க, மாவட்டத்துக்கு ஒரு துணை அமைப்பாளரை தேர்வு செய்ய விண்ணப்பிக்கும்படி இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கருத்தியல் உரையாடல், ஆக்கப்பூர்வமான விவாதம், அவதூறுகளை முறியடித்தல் என்று அரசியல் செயற்பாடுகள் நிகழும் களமாக சமூக வலைத்தளங்கள் …

பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி பேசியது தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, பெண்கள் குறித்தும், சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், …