தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயிர் உற்பத்தியை அதிகரிக்க, நிலத்தடி நீர் பாசனத்தில் மின்மோட்டார் பம்புசெட்டு அமைக்கும் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல் ஆகிய நோக்கத்திற்காக செயல்படுத்தி வருகிறது. நடப்பு 2025-26 ஆம் ஆண்டில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்மோட்டார் பம்புசெட்டு அமைப்பதற்கு புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின் மோட்டார் […]

ஜி.எஸ்.டி பலனை மக்களுக்கு வழங்காமல் ஊட்டச்சத்தைப் பறிக்கும் ஆவின் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தத்திற்கு இணங்க ஆவின் பொருட்களின் விலையைக் குறைக்காமல் இழுத்தடித்த திமுக அரசு, மக்களின் கண்டனக் குரல் எழும்பியதும் பண்டிகைக் கால போர்வையில் […]

திண்டுக்கல்லில் சுமார் 22,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார் ‌. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) போது, ஏறக்குறைய 7,227 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.சுமார் 26 வாக்குச்சாவடிகளில் இந்த முறைகேடு நடைபெற்றிருக்கிறது. இதன் பின்னணியில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை சம்பந்தப்பட்டிருக்கின்றனர். சின்னாளப்பட்டி […]

எஸ்ஐஆர் மூலம் வாக்கு திருட்டு நடந்தால் தமிழகத்தில் நிச்சயமாக மக்கள் புரட்சி வெடிக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் 9-ம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கொலை சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இதற்கு எல்லாம் காரணம் மதுக்கடைகள் தான்.மின் கட்டண […]

திமுக கூட்டணியில் ‘புதிய திராவிட கழகம்’ கட்சி இணைந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைகள் பிப்ரவரி, மார்ச் வாக்கில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கூடுதலாக சில கட்சிகள் கூட்டணிக்கு வர இருப்பதாக தகவல். இவர்களை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பல கட்சிகள் திமுக […]

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 1,996 காலி இடங்களை நிரப்பும் வகையில் கடந்த அக்.12-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, இறுதி விடைக்குறிப்பு, தேர்வு முடிவுகள் மற்றும் ‘1: 1.25’ என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் […]

தஞ்சாவூரில் திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை கொடூரமாக வெட்டிக் கொலை. சட்டம் ஒழுங்கை காப்பதில் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும். வீண் பெருமை பேசுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற காவியா என்ற ஆசிரியை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியை காவியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் […]

அதிமுகவை பலவீனப்படுத்தி, தமிழகத்தில் இரண்டாவது பெரிய சக்தியாக வரவேண்டும் என்பது தான் பாஜகவின் ஆசை” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெகவில் இணைவது என்பது செங்கோட்டையன் எடுத்த முடிவு. அவரின் தனிப்பட்ட விருப்பம். தவெகவில் செங்கோட்டையன் இணைவதால் பலமா, பலவீனமா என்பதை 2026 சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி பெறும் ஓட்டுகளை பொறுத்தே சொல்ல முடியும். அதிமுகவை பலவீனப்படுத்தி, தமிழகத்தில் […]

எல்லாவற்றையும் எடப்பாடி பழனிசாமிதான் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு சார் முதல்வராக இருக்கீங்க?” என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரோட்டில் மேடை ஏறிய முதலமைச்சர், வழக்கம் போல என்னைப் பற்றியே புலம்பித் தள்ளியுள்ளார். அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது, எது நடந்தாலும் “ஆக, எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்” என்று கூறிக்கொண்டே இருந்த […]