fbpx

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளை ஒழிப்பதில் ஒரு பெரிய வெற்றியாக, ஞாயிற்றுக்கிழமை பிஜாப்பூர் வனப்பகுதியில் 12 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். என்கவுன்டர் பற்றிய விவரங்களை வழங்கும் சத்தீஸ்கர் காவல்துறை, பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்காவின் காட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை என்கவுன்டர் தொடங்கியதாகக் கூறியது.

இந்த மோதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு பேர் …

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 10 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மாவட்ட தனிப் படை (டிஆர்சி), சிறப்பு அதிரடிப்படை, பஸ்தர் பாதுகாப்புப் படை அடங்கிய கூட்டுப் படையினர் அங்கு ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்புக்கும் …

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் திங்கள்கிழமை போலீஸார் நடத்திய என்கவுன்டரில் நான்கு நக்சல்கள் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் சத்தீஸ்கர் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பாம்ராகாட் தாலுகாவின் கோப்ரி வனப்பகுதியில் இந்த என்கவுன்டர் நடந்தது.

அந்த பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்ததையடுத்து, போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கோப்ரி என்பது பாம்ரகட்டின் கடைசி …

சத்தீஸ்கரில் காவல் துறையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுண்டரில் 30 நக்சல்கள் கொல்லப்பட்டனர். நாராயண்பூர் – தாண்டேவாடா பகுதியில் மாட் பகுதியில் நக்சல்களை தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த மோதலில் நக்சலைட்கள் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து ஏகே சீரிஸ் மற்றும் பிற …

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை. சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை அருகே காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி சென்றபோது, என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல்.

சென்னையில் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் …

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு (செப்டம்பர் 13) என்கவுன்டர் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று (செப்டம்பர் 14) நடந்து வரும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் …

மாநிலம் முழுவதும் அல்லது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் கொலைகள், கொள்ளைகள் நடக்கும்போது கைது செய்யப்படுபவர்களில் சிலர் ‘என்கவுன்டர்’ செய்யப்படுவது வழக்கமாக இருக்கிறது. பெரும் குற்றங்களுக்குப் பிந்தைய என்கவுன்டர்கள் பல சமயங்களில் பொதுமக்களின் வரவேற்பை பெற்றாலும், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த நிகழ்வு குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தான், சென்னை மதுரவாயலில் பிரபல …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை காலை என்கவுன்டர் நடந்தது . எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள கும்கடி போஸ்ட் அருகே மோதல் ஏற்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது, ​​ஒரு மேஜர் உட்பட ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, ஐந்து வீரர்களும் …

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளை எப்படி அழைத்துச் செல்கிறீர்களோ, அதேபோல நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக …

மகாராஷ்டிராவில் காவல்துறையினர் நடத்திய என்கவுன்டரில் 12 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சண்டையில் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.

சத்தீஸ்கர் எல்லைக்கு அருகில் உள்ள வண்டோலி கிராமத்தில் இந்த என்கவுன்டர் நடந்தது. கட்சிரோலி காவல்துறையின் கூற்றுப்படி, வண்டோலி கிராமத்திற்கு அருகே 12 முதல் 15 மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது, அதைத் தொடர்ந்து புதன்கிழமை காலை …