முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ ஆனைக்கு அறம்’ என்றால் ‘குதிரைக்கு குர்ரம்’ என்று சொல்வதையும், ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்’ வாடிக்கையாகக் கொண்ட தமிழகத்தின் ‘பொம்மை முதலமைச்சர்’ திரு மு.க. ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில்தான் ஸ்டிக்கர் ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால், அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா […]

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய், சமீபத்தில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்திருந்தார்.. அவரின் இந்த பேச்சுக்கு முன்னாள் அமைச்சர்கள் பலரும் பதிலடி கொடுத்து வந்தனர்.. தனது சம்பளத்தை கருப்பு பணமாக வாங்கும் விஜய்யே ஊழல்வாதி என்றும் விஜய் எல்லாம் ஊழலை பற்றி பேசக்கூடாது என்றும்  விமர்சித்து வந்தனர். அந்த […]

தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது என்று இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான […]

பெரம்பலூரில் போலீசார் முன்னிலையில் ரவுடி வெள்ளைக்காளை என்பவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் சென்னை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.. சென்னையில் இருந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.. அப்போது பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு இறையூர் என்ற இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு […]

மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நிறைவடைந்த நிலையில் கூட்டணி தலைவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.. எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி  “ தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது.. தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை.. கொலை, கொள்ளை நடக்காத நாள் இல்லை.. இது தான் திமுக ஆட்சியின் […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ தமிழ்நாட்டு பேரவைக்கான பொதுத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளிக்க உள்ளோம்.. குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 வழங்கப்படும்.. இந்த பணம் குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நகரப் […]

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர். ஆர். என். ரவியை சந்தித்தார்.. திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து ஆளுநரிடம் அவர் மனு அளித்ததாக கூறப்படுகிறது.. ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி “ திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து ஆளுநரிடம் மனு அளித்தோம். 2021-ம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை ஆளுநரிடம் […]

நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் “ மூச்சுவாங்கும் அளவுக்கு இவ்வளவு மேஜர் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம்.. எந்த துறை எடுத்துக் கொண்டாலும் சாதனைகள்.. ஒன்றிய அரசு வெளியிடும் அறிக்கைகளில் நம்பர் 1 தமிழ்நாடு தான். இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? இது எனது ஓபன் சேலஞ்ச்.. தைரியம் இருந்தால் சொல்லுங்க..” என்று ஓபன் […]