ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள தாளவாடியில் தனது தாயுடன் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிறு வலிப்பதாக கூறிய நிலையில் தாய் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மகளை அழைத்து சென்றுள்ளார்.  மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்தபோது மருத்துவர் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த தாய் தனது மகளிடம் தனிபட்ட முறையில் விசாரித்துள்ளார். […]

ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள கோபிசெட்டிபாளையத்தின் எருமை குட்டை பகுதியில் ராமசாமி என்பவர் தனது மனைவி ஈஸ்வரி மற்றும் மகன்கள் சஞ்சீவ் காந்தி (43), நாகராஜ் (38) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சஞ்சீவ் காந்திக்கு திருமணம் ஆகிய நிலையில் 7 வயது மகளுடன்  அந்த பகுதியில் உள்ள சின்னகுளம் ஊரில் எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டு வசித்து வந்துள்ளார். நாகராஜ் என்பவரும் தனது மனைவி மற்றும் ஒரு […]

ஈரோடு மாவட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சாந்தா என்ற கட்டிடத் தொழிலாளி. இவர் ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். கடந்த 1ம் தேதி அன்று இரவு வார சந்தை வளாகத்திலேயே எப்போதும் போல் தூங்கி கொண்டு இருந்தார் சாந்தா. மறுநாள் காலை சென்று பார்த்தபோது முகம் மற்றும் தலைகளில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து […]

பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை, கோழி தீவனம், தீவன மூலப்பொருட்கள் வாங்க தடை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கேரள மாநிலம்‌ ஆலப்புழா மாவட்டத்தில்‌ பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஈரோடு மாவட்டத்தில்‌ பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி. ஈரோடு மாவட்டத்தில்‌ பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ தாக்குதல்‌ எதுவும்‌ இல்லை. பறவைக்காய்ச்சல்‌ […]

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பகுதியில் வசித்து வரும் பிளஸ்-1 மாணவி நேற்று மாலை நேரத்தில் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், அவரை ஒரு வாலிபர் வழிமறித்து திடீரென கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும் இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தப்பி செல்ல முயன்று கத்தி அலறினார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வரவே, அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் தப்பி ஓடியுள்ளார். கழுத்து அறுபட்ட […]

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, […]

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கடம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் கூலி தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி செந்தில்குமாரின் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அந்த சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி வீட்டிற்குள் அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை செய்துள்ளார். ஏதோ அசௌகரியமாக நடப்பதை உணர்ந்த சிறுமி அங்கிருந்து தப்பியோடு தனது பெற்றோரிடம் அழுது கொண்டே […]

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே கணக்கம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு செல்கின்ற சாலையில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு கிராமங்களுக்கு இடையே முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக பெய்த தொடர் கனமழையால் ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் பகுதி வெள்ளக்காடாக இருக்கிறது. விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. சாலைகளிலும் கடுமையான மழையால் நீர் பெருக்கெடுத்து […]