தேர்வில் மோசடி செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி எச்சரித்துள்ளார்.. . வினாத்தாள் கசிவு, ஆட்சேர்ப்பில் முறைகேடு ஆகியவை உத்தரகாண்ட மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இதையடுத்து ஆட்சேர்ப்பில் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் அங்கிருந்த போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டதை அடுத்து போராட்டம் வன்முறையாக மாறியது. […]