கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே தனியாருக்கு சொந்தமான காலியிடம் ஒன்று உள்ளது. அந்த பகுதியில் சிறிய அறை ஒன்றும் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார். இதனை கவனித்த பொதுமக்கள், உடனடியாக காட்டூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், எறிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். […]