அமலாக்கத்துறை நடவடிக்கையால் பாஜக மீதான தனது நிலைப்பாட்டை திமுக மாற்றிக் கொள்ளாது, அமலாக்கத்துறைக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம், பாஜகவின் கைப்பாவை போல அமலாக்கத்துறை செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர். என் ரவி நேற்று கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தான் எடுத்த நடவடிக்கைக்கான காரணங்களை விளக்கி இருந்தார். […]

கடந்த 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையில் குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் […]

இலங்கை கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டைமானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணம் சிங்களம், தமிழ், இஸ்லாமியம் என மூன்று தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். தற்போதைய சூழ்நிலையில் கிழக்கு மாகாண சட்டப்பேரவையும், உள்ளூராட்சி மன்றங்களும் காலாவதியாகி, தேர்தல் நடத்தப்படாமல் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இளம் வயதில் ஊவா மாகாண முதலமைச்சர், அமைச்சர், பிரதமரின் இணைப்பு […]

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில், மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவில் முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பல்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.சுமுகமான உரையாடல், முரண்படும் கட்சிகள்/குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைகள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே […]

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் அமைதியை கொண்டு வரும் நடவடிக்கையாக அமைதிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த அமைதிக் குழுவில், மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே சமாதான நடவடிக்கை மூலம் அமைதியைக் காக்கவும், விவாதங்களை நடத்தவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இந்த அமைதிக் குழு முக்கிய பங்கு […]

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரிசர்வ் வங்கியில் நிதிக் கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாகவே நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்திய பொருளாதாரம் மற்றும நிதித்துறை வலுவாகவும், நெகிழ்ச்சியுடனும் உள்ளன. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. அதை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கவனித்து வருகிறது. பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் மேலாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஆண்டின் […]

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ 1கோடி 8லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்கள். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் மகேஸ் ஆகியோர் ரூபாய் 50,10.000 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனங்களை 60 பயனாளிகளுக்கு வழங்கினார். இதே போல் கலைஞர் […]

தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தமிழக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2022 மார்ச் 31- உடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதித்தணிக்கை அறிக்கையை இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தமிழ்நாடு ஆளுநரிடம் சமர்ப்பித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக, இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 151(2)-ன் படி இந்திய தலைமைக்கணக்கு அதிகாரி இந்த அறிக்கையை மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாக முதன்மை கணக்குத்தணிக்கை அலுவலர் நெடுஞ்செழியன் வெளியிட்ட […]

ஆளுநர், அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டவர் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.. வரும் 3-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்திருந்தது.. மேலும் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு சட்டப்பேரவை கூட்டத்தொரை கூட்டுவதற்கான கடிதம் அனுப்பப்பட்டது.. ஆனால் அம்மாநில ஆளுநர் இன்று காலை வரை பஞ்சாப் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட அனுமதி வழங்கவில்லை.. இந்நிலையில் பஞ்சாப் அரசு, இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. […]

2023ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்ததும், சபாநாயகர் அப்பாவு உரையை தமிழில் படிக்கவிருக்கிறார். இதையடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர் மதியம் அலுவல் ஆய்வு குழு கூட்டம் […]