திருநெல்வேலியை சேர்ந்த ஹரி நாடார் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த சட்டசபை பொது தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம்கண்டு சுமார் 37 ஆயிரம் வாக்குகளை பெற்றவர் இந்த ஹரி நாடார். தொழிலதிபரான இவர் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருந்து வருகிறார். ஹரி நாடார் மீது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சார்ந்த இஸ்மாயில் பரகத் […]