டெல்லி “மதராசி கேம்ப் குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. “மதராசி கேம்ப்” என்பது தெற்கு டெல்லி, நிஜாமுதீன் ரயில்வே நிலையத்துக்கு அருகிலுள்ள பராப்புல்லா ஜங்க்புரா வடிகாலின் கரையில் அமைந்துள்ள ஓரங்கட்டப்பட்ட குடிசை பகுதியாகும். இக்குடிசைப் பகுதியிலுள்ள 370 குடிசை வீடுகளில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். டெல்லி உயர்நீதிமன்றம், “மதராசி கேம்ப்” என்பது பராப்புல்லா வடிகாலின் கரையில் கட்டப்பட்ட […]
highcourt
பரிசாக வந்த தங்க நகைகள் பெண்களின் தனிப்பட்ட சொத்து என்று கூறிய டெல்லி உயர்நீதிமன்றம் அதை அவர்களின் அனுமதியின்றி எடுக்க கணவர்களுக்கு கூட உரிமையில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணத்தின் போது தனக்கு சீதனமாகவும், பரிசாகவும் வழங்கப்பட்ட நகைகளை தன்னிடம் இருந்து பறிக்க முயல்வதாக கூறி மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் […]
சென்னை உயர்நீதிமன்றம் இன்று இரவு அனைத்து வாயில்களும் பூட்டப்படுகின்றது. ஏன் என்பதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றக் கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம். பாரம்பரிய கட்டிடமான உயர்நீதிமன்றம் தனது பழைமை மாறாமல் கம்பீரமாக நிற்கின்றது. உயர்நீதிமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டியதால், அதற்கு மரியாதை செய்யும் வகையில் இன்று ஒரு நாள் இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மூடப்படுகின்றது. பல ஆண்டுகளாக இந்த சம்பிரதாயம் […]
கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியா மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு பதில் அளித்துள்ளது. சென்னையை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியா கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ப்ரியாவுக்கு உயிருக்கு ஆபத்து என்பதை கூறி கால்களை அகற்றி […]