பீகார் மாநிலத்தில் காதல் திருமணம் செய்த கணவன் மனைவி மற்றும் அவர்களது 1 வயது மகள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். பீகார் மாநிலம் நவாச்சியா மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி குமாரி மற்றும் சந்தன் குமார் ஆகியோர் சிறு வயது முதலே […]

நெல்லை மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக சொந்த அக்கா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் 17 வயது சகோதரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் ஆசீர். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். இவரது மகள் தங்கத்தாய்(21) அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூக இளைஞரை காதலித்து […]

ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்ற மகளையே கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய கொலையாளி தந்தையை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவ்லால் மேக்வால். இவர் தனது குடும்பத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 12 வருடங்களாக தனியாக வசித்து வருகிறார். இவரது மனைவி மற்றும் மகள் குஜராத்தில் வசித்து வருகின்றனர். […]