இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் 15 வயது மாணவன் ஒருவனின் ஆசனவாயில் தற்செயலாக கடப்பாரை புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் கோந்தமாள் மாவட்டத்தைச் சார்ந்த கவர்னகிரி பகுதியில் வசித்து வரும் நபர் சக்தி படகுரு. 15 வயது சிறுவனான இவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இவர்களது பள்ளியில் கட்டுமான பணி மற்றும் பராமரிப்பு பணியை நடந்து வருவதாக தெரிகிறது இதற்காக ஆங்காங்கே […]

திருச்சி பெரியார் நகரைச் சார்ந்த ஒருவருக்கு மாஞ்சா நூல் பட்டம் கழுத்தில் சிக்கியதால் படுகாயம் ஏற்பட்டது . இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரிமாதிர்ச்சியை ஏற்படுத்தியது பட்டம் விடும் காலம் தொடங்கி விட்டாலே மாஞ்சா நூலும் அதனால் ஏற்படும் விபத்துகளும் தொடர் கதையாகி விடும். மாஞ்சா நூலில் பட்டம் விடுவதால் சாலையில் செல்பவர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் உயிருக்கியே ஆபத்து ஏற்படும் சூழல்கள் இருந்து வருவதால் மாஞ்சா நூலை வைத்து பட்டம் விடுவதற்கு […]

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்பாபு உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த தகவலை தெலுங்கு நடிகை கல்யாணி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் சரத் பாபு. தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான பாலச்சந்தர் இயக்கிய நிழல் நிஜமாகிறது என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சிவாஜி கணேசன், […]

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி சார்ந்த மாணவனை அங்குள்ள பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரம்பால் தாக்கியதில் படுகாயமடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான் ஹரிராம்.. இவரது தந்தையின் பெயர் […]

உத்திர பிரதேச மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் மீது பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி கொண்டு பாய்ந்ததில் சிறுவன் படுகாயம் அடைந்தான். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. உத்திர பிரதேச மாநிலத்தின் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் கண்காட்சி மற்றும் ஒத்திகை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராணுவ வீரர்களும் பாதுகாப்பு படை வீரர்களும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு வருகை […]

மத்திய பிரதேச மாநிலத்தில் புலியை சீண்டிய விவசாயி, புலியின் தாக்குதலால் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள குஷியாலா என்ற கிராமத்தில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கு புலியை பார்த்த விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் புலியை விரட்டுவதற்காக அதனைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று துன்புறுத்தியுள்ளனர். அப்போது புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

அமெரிக்காவின் செஸ்டர்வில்லே நகரில் ஆறு வயது சிறுமியை பிட்புல் நாய் கடித்ததால் அந்த சிறுமிக்கு முகத்தில் ஆயிரம் தையல்கள் போடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் செஸ்டர்வில்லே நகரைச் சார்ந்த டோரதி நார்டன் என்பவரின் மகள் லில்லி என்ற ஆறு வயது சிறுமி. தனது அண்டை வீட்டில் சென்று விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வீட்டிலிருந்த பிட்புல் நாய் சிறுமியை கொடூரமாக தாக்கி கடித்து இருக்கிறது. இதில் சிறுமிக்கு பலத்த […]

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வன்னாங் கோவில் இன்னும் இடத்தில் தனியார் தார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவதோடு பொதுமக்களுக்கும் அவ்வப்போது உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இந்த தொழிற்சாலையை சுற்றி இருக்கும் கிராம மக்கள் வேறு இடத்திற்கு இந்த தொழிற்சாலையை மாற்றக்கோரி போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த தொழிற்சாலையில் இருந்து கடுமையான கரும்புகை […]

நடிகை சமந்தாவின் உடல்நிலை மீண்டும் மோசமானதால் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.. கடந்த ஆண்டு தன் காதல் கணவன் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் சினிமாவில் முழு வீச்சில் நடிக்கத் தொடங்கினார். புஷ்பா படத்தில் இவரது கிளாமர் நடனம் வெகுவாக கவர்ந்ததை அடுத்து, நிறைய பட வாய்ப்புகளை […]