மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று இரண்டு இந்திய கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது.. இந்த தாக்குதல்களில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினர். அதேவேளையில், இச்சம்பவத்தின் போது கப்பல்களில் ஒன்றின் அறைக் கண்ணாடி ஒன்று உடைந்து நொறுங்கியதாகவும், இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பின்விளைவுகள் இருக்கும் என்று இந்திய அதிகாரிகள் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். […]

