மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் எல் மென்சோ சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு கலவரம் வெடித்துள்ளது.. எல் மென்சோ கொல்லப்பட்டதால் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியும், வாகனங்களை தீயிட்டு கொளுத்தியும் ஆதரவாளர்கள் அட்டகாசம் செய்தனர்.. மேலும் மெக்சிகோவில் கண்ணில் தென்படும் வாகனங்கள், வணிக வாகனங்களுக்குள் அத்துமீறி நுழைந்து தீ வைத்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது.. இந்த நிலையில் மெக்சிகோவில் பல பகுதிகளில் கடுமையான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதால், அங்கு வசிக்கும் இந்திய […]
Indian nationals
மெக்காவில் இருந்து மதீனாவுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து இன்று அதிகாலை டீசல் டேங்கர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 42 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் முஃப்ரிஹாத் என அடையாளம் காணப்பட்ட இடத்தில் நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. இந்த துயரச் […]
ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் சிக்கிய இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியாவின் கோரிக்கைக்கு ஈரான் அரசாங்கம் திங்களன்று ஒத்துழைப்பு தெரிவித்துள்ளது. தற்போது ஈரானில் உள்ள சுமார் 10,000 இந்தியர்களில் பெரும்பாலோர் மருத்துவம் மற்றும் மதத்துடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஆகும். தற்போதைய மோதலால் ஈரானிய வான்வெளி மூடப்பட்டுள்ளதாலும், இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நில எல்லைகள் அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் வழியாக பயன்படுத்த முடியும் என […]

