அமெரிக்கா – ஈரான் இடையிலான ராணுவ மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரானைச் சேர்ந்த 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தாக்கி செயலிழக்கச் செய்ததாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானும் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க கடற்படைக் கப்பலை […]

மேற்கு ஈரானில் உள்ள சனந்தாஜ் மற்றும் ஹமேடான் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில், சனிக்கிழமை நிகழ்ந்த விபத்து காரணமாக எரிபொருள் டேங்கர் லாரி ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. டேங்கர் லாரி வெடித்ததில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த பல வாகனங்களுக்கும் பரவி சேதத்தை ஏற்படுத்தியது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சனந்தாஜ் நகரில் […]

ஈரானுக்கு நிதி உதவி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு நிதி அல்லது தளவாட உதவிகளை வழங்கும் நாடுகள் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். ஈரான் மீதான தற்போதைய ராணுவ நடவடிக்கை, வரலாற்றிலேயே எந்தவொரு நாட்டின் மீதும் மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கை என்று அவர் வர்ணித்துள்ளார். தான் தவிர வேறு […]

ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பயணித்த மூன்று வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என கூறிய அமெரிக்கா, அதற்கு பதிலடியாக ஈரானின் 80-க்கும் மேற்பட்ட முக்கிய ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக […]

மத்திய கிழக்கு முழுவதும் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்காவும் ஈரானும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கேள்விக்குறியாகி உள்ளது.. ஆம்.. இந்த ஒப்பந்தம் போடப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே தெற்கு லெபனானில் நேற்று மிகவும் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது.. லெபனானின் நபாத்தியா மாவட்டம் முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் […]

மேற்கு ஆசியாவில் நடந்த போரின் காரணமாக நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீண்ட இணையத் தடைக்குப் பிறகு, ஈரான் படிப்படியாக இணையச் சேவையை மீண்டும் கொண்டுவரத் தொடங்கியுள்ளது. இதனிடையே, நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருந்த வேளையில், புதிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா நம்பிக்கைத் துரோகஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானிய அதிகாரிகளின் கூற்றுப்படி, நாட்டின் தெற்குப் பகுதிகளில் நடந்த இந்த […]