மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்காக ஈரான் முன்வைத்த 10 அம்ச முன்மொழிவை டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். ஆனால், ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையில் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அவர் அறிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இப்பகுதியில் இருந்து ஈரானிய நாகரிகத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்ற தனது காலக்கெடு […]
iran news
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் 38-வது நாளாகத் தொடர்கிறது.. போர் எப்போது முடியும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை, மேலும் ஒவ்வொரு மணி நேரமும் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் திறக்காவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்து, டொனால்ட் டிரம்ப் தெஹ்ரானுக்கான தனது காலக்கெடுவை 24 மணி நேரம் நீட்டித்துள்ளார். “செவ்வாய்க்கிழமை, இரவு 8:00 மணி!” என்று பதிவிட்டதன் மூலம், நேரம் […]
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக முன்னேறி வருவதாக கூறிய டிரம்ப், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கும் கால அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பதாக தெரிவித்தார். தனது ‘Truth Social’ கணக்கில் பதிவிட்ட அவர், ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும் “ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையின்படி, எரிசக்தி நிலையங்களை அழிக்கும் நடவடிக்கையை 10 நாட்களுக்கு, அதாவது கிழக்கு […]
ஈரானின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான அதன் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி மற்றும் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் (IRCG) சக்திவாய்ந்த துணை ராணுவத் தன்னார்வப் படையின் தலைவர் குலாம்ரெசா சுலைமானி ஆகியோரை வான்வழித் தாக்குதல்களில் கொன்றதாக இஸ்ரேல் நேற்று தெரிவித்தது.. பிப்ரவரி 28-ம் தேதி அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி தொடங்கின.. ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ என்று இஸ்ரேலும், ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ […]
தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தில், ஈரானிய முன்னாள் உச்ச தலைவர் அலி ஹொசைனி கமேனியின் விமானத்தை தனது விமானப்படை இரவு முழுவதும் தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.. இந்தத் தாக்குதல் ஈரானின் பிராந்திய ஒருங்கிணைப்புத் திறன்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அடியாக பார்க்கப்படுகிறது.. இந்த விமானத்தை கமேனி மற்றும் பிற மூத்த ஈரானிய அதிகாரிகள் இராணுவ கொள்முதல்களை எளிதாக்கவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்கள் மூலம் நட்பு “அச்சு” நாடுகளுடன் உறவுகளை […]
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் டையிலான போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இரு தரப்பினரும் நேரடியாக மோதிக் கொண்டிருக்கும் இந்தப் போர் தற்போது 6-வது நாளாக நீடித்து வருகிறது. தற்போதைக்கு இந்த மோதல் குறையும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. பலி எண்ணிக்கை அதிகரிப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த 5 நாட்களில் ஈரானில் மட்டும் 1,000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லெபனான் நாட்டில் சுமார் […]
ஈரான் மீது இன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டடு வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் குடியிருப்பு அரண்மனை மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்தது, பின்னர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பங்கை உறுதிப்படுத்தினார்.. குண்டுகள் “எல்லா இடங்களிலும் வீசப்படும்” என்று எச்சரித்தார். ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் நாடு தழுவிய […]
ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல்களை ரஷ்யா ‘முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று கண்டித்துள்ளது. ஈரான் மீது இராணுவ தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களை, “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பகுதியிலும் உலக அளவிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது. ஈரானில் தற்போது நடந்து வரும் […]
அமெரிக்க தாக்குதல்களுக்கு ஈரானின் பதிலடியை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ஈரானின் இராணுவ செய்தித் தொடர்பாளர் இன்று அமெரிக்காவுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட, அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் சட்டபூர்வமான இலக்குகளின் நோக்கத்தை விரிவுபடுத்தியதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். ஈரானின் மத்திய இராணுவ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபாகாரி, அமெரிக்கா தனது நடவடிக்கைகளின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறினார். […]

