அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.. இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன.. இந்த நிலையில் ஈராக்கின் கோர் அல் ஜுபைர் துறைமுகத்திற்கு அருகே அமெரிக்காவிற்கு சொந்தமான சஃபேசியா விஷ்ணு என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலை ஈரானின் “தற்கொலை” படகு தாக்கியது.. இந்த தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மார்ஷல் தீவுகளின் […]

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன்கள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்ததாக துபாய் அரசு தெரிவித்துள்ளது. புதன்கிழமை துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இரண்டு ட்ரோன்கள் விழுந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவத்தில் இரண்டு கானா நாட்டினர் மற்றும் ஒரு வங்கதேச நாட்டினர் சிறிய அளவில் காயமடைந்துள்ளனர். மேலும் ஒரு […]

மத்திய கிழக்கு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் போரின் 12வது நாளில் கடலில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளன. உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் 16 ஈரான் கப்பல்களை தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதாவது ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடல்சார் கண்ணிவெடிகளை (Naval Mines) வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈரானின் 16 படகுகளை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து […]

இஸ்ரேல் ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையி, இந்த போர் எப்போது முடிவடையும் என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்தார்.. அப்போது “ஈரானுக்கு எதிரான போர் நீண்ட காலம் நீடிக்காமல் குறுகிய காலத்திலேயே முடிவடையக்கூடும். ஈரானில் இஸ்லாமிய ஆட்சியை பாதுகாக்கும் போராட்டத்தை மேற்பார்வை செய்ய புதிய கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட உயர்ந்த மதத் தலைவரை தேர்வு செய்திருந்தாலும், இந்தப் போர் குறுகிய காலமே நீடிக்கலாம் என்று கூறினார். ஈரான் […]

மத்திய கிழக்கில் நிலவும் குழப்பத்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறதா என்ற கேள்வி அனைவருக்கும் எழும்.. இந்தக் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இது மிகவும் உறுதியளிக்கும் பதில். தற்போதைய உலகளாவிய நிலைமை இருந்தபோதிலும், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று அரசாங்க வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்தியாவின் எரிபொருள் இருப்பு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இது […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு பின்னர் ஈரான் இனி மத்திய கிழக்கில் மற்ற நாடுகளை மிரட்டும் “அதிகாரம் கொண்ட நாடாக இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் இந்த போர் தற்போது இரண்டாவது வாரத்திற்குள் சென்றுள்ள நிலையில், சனிக்கிழமையும் ஈரான் மீது கடுமையான தாக்குதல் […]

ரஷ்யா ஈரானுக்கு மிகவும் முக்கியமான உளவுத் தகவல்களை வழங்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன… மத்திய கிழக்கில் செயல்பட்டு வரும் அமெரிக்க ராணுவ சொத்துகள், குறிப்பாக போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் முக்கியமான ராணுவ வளங்களை கண்டறிந்து தாக்குவதற்கு ஈரானுக்கு உதவக்கூடும் என கூறப்படுகிறது. அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை நன்கு அறிந்த அந்த இரண்டு அதிகாரிகளும் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையில் AP செய்தி நிறுவனத்திடம் பேசினர். அவர்கள் கூறுகையில், […]

துபாய் நகரில் வசிக்கும் மக்களுக்கு இன்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. “ஏவுகணை தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்று எச்சரிக்கும் அவசர அறிவிப்பு நகரம் முழுவதும் பலரின் மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த எச்சரிக்கை, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் அறிவிக்கப்பட்டது.. கடந்த சனிக்கிழமை இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் அமெரிக்கா இராணுவ தளங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் உள்ள வளைகுடா […]

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் டையிலான போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இரு தரப்பினரும் நேரடியாக மோதிக் கொண்டிருக்கும் இந்தப் போர் தற்போது 6-வது நாளாக நீடித்து வருகிறது. தற்போதைக்கு இந்த மோதல் குறையும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. பலி எண்ணிக்கை அதிகரிப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த 5 நாட்களில் ஈரானில் மட்டும் 1,000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லெபனான் நாட்டில் சுமார் […]

மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் புது டெல்லியில் ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை, மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியம் ஆகிய பகுதிகளில் உருவாகி வரும் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இது […]