இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ளது. ஆனால், அந்த தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் 76 வயதான பிரதமர் நெதன்யாகு அங்கு இருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ஆவது தாக்குதல் அலையில், ‘கெய்பார் ஷெகான்’ (Kheybar Shekan) என்ற கண்டம் விட்டு […]
israel
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.. நேற்று இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, முழு பிராந்தியத்திலும் நிலைமை வேகமாக மாறியது. இஸ்ரேல் இதை ஒரு முன்னெச்சரிக்கை தாக்குதல் என்று கூறியுள்ளது.. மேலும் சாத்தியமான தாக்குதலின் அச்சுறுத்தலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியது. ஈரானும் பதிலடி கொடுக்கும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. தெஹ்ரான், இஸ்ஃபஹான், கோம் மற்றும் கோர்ராமாபாத் உள்ளிட்ட பல […]
ஈரான் மீது இன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டடு வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் குடியிருப்பு அரண்மனை மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்தது, பின்னர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பங்கை உறுதிப்படுத்தினார்.. குண்டுகள் “எல்லா இடங்களிலும் வீசப்படும்” என்று எச்சரித்தார். ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் நாடு தழுவிய […]
அமெரிக்கா, ஈரானில் “பெரும் போர்செயல்களை” தொடங்கியுள்ளதாக டொனால் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில், குறிப்பாக ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி அலுவலகங்கள் அருகே பல வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. இந்த தாக்குதலை இஸ்ரேல் “முன்னெச்சரிக்கை தாக்குதல்” என்று விளக்கம் அளித்துள்ளது… ஈரான் மக்களுக்கு டிரம்ப் நேரடி அழைப்பு ஈரான் […]
இன்று அதிகாலை இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது.. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.. ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகர மையப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, அடர்ந்த புகை மேகங்கள் எழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தெஹ்ரான் நகரின் பலப் பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.. ஈரான் அரசு தொலைக்காட்சி வெடிப்பு நடந்ததை உறுதிப்படுத்தினாலும், ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் […]
ஈரானில் உள்ள தனது குடிமக்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தியுள்ளது. பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட்ட புதிய ஆலோசனையில், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய எந்தவொரு போக்குவரத்தையும் பயன்படுத்தி வீடு திரும்புமாறு இந்தியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மோதல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. […]
இன்றைய போர்கள் வெறும் துப்பாக்கிகள் அல்லது ஏவுகணைகளால் மட்டுமே நடைபெறுவதில்லை. அதற்கு புதிய வடிவம் கிடைத்துள்ளது.. அது மைக்ரோ ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்கள். இவை மிகச் சிறிய அளவில் இருப்பினும், அவற்றின் சக்தி மற்றும் தொழில்நுட்பம் மிகப் பெரிய ஆயுதங்களுக்கே சவாலாக உள்ளது. மைக்ரோ ட்ரோன் என்பது மனிதர் இல்லாத வானூர்தி (UAV) ஆகும். இதன் எடை சில நூறு கிராம் முதல் இரண்டு கிலோ வரை இருக்கும். […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (நெசெட்) உரையாற்றினார்.. அப்போது எம்.பிக்கள் எழுந்து நின்று கைதட்டி ட்ரம்பை பாராட்டினர்.. அமர்வின் போது, வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி ஆகியோர் அமெரிக்க-இஸ்ரேல் உறவுகளை வலுப்படுத்துவதில் வகித்த பங்கிற்காக சிறப்புப் பாராட்டுதல்களைப் பெற்றனர். நெசெட்டில் உரையாற்றிய ட்ரம்ப், இதை “ஆழ்ந்த மகிழ்ச்சி, உயர்ந்து வரும் நம்பிக்கை […]
காசாவில் இரண்டு வருடங்களாக நீடித்து வரும் பேரழிவுகரமான போரை நிறுத்தும் போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் உயிருடன் இருக்கும் 20 பணயக்கைதிகளையும் விடுவித்துள்ளது. நாளடைவில், 1,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் பரிமாறிக் கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமை ஹமாஸ் 20 பணயக்கைதிகளை விடுவித்தார். அவர்கள் இஸ்ரேலில் உள்ள குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறைபிடிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செஞ்சிலுவைச் சங்கம் இந்த […]
Prime Minister Modi today welcomed the signing of the first phase of US President Donald Trump’s peace plan between Israel and Hamas.

