இஸ்ரேல் கடந்த வாரம் முதல் நடத்தி வரும் தாக்குதலில் ஈரானில் 657 பேர் பலியாகி இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கும் வகையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்கிய இந்த தாக்குதல்கள், 9-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துணைநிற்காமல், தாக்குதல்களை பரஸ்பரமாக நடத்தி வருகின்றன. […]

ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது ‘நிரந்தர எதிரிகள் இல்லை, நிரந்தர நண்பர்கள் இல்லை, நிரந்தர நலன்கள் மட்டுமே.’ இந்த மேற்கோள் இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் மிகவும் பொருத்தமானது, ஏனென்றால் ஒரு காலத்தில் ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாக இருந்த இஸ்ரேலும் ஈரானும் இன்று ஒருவருக்கொருவர் சத்தியப்பிரமாண எதிரிகளாக மாறிவிட்டன. மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஒருவருக்கொருவர் ஏவ முயற்சிக்கும் இந்த இரண்டு நாடுகளும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தன. அத்தகைய சூழ்நிலையில், […]

மத்திய கிழக்கு பகுதியில் ஈரானும் இஸ்ரேலும் இடையே நடக்கும் ஏவுகணை மற்றும் சைபர் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சைபர் போர்களால் நேரடியாகத் தாக்கப்படாத மூன்றாம் நாடுகளும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பரவலான தாக்கத்திற்கே “ஸ்பில்ஓவர் எஃபக்ட் (Spillover Effect)” என பெயர். அந்த வகையில், இந்தியா போன்ற நாடுகளும் இந்த தாக்கங்களால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால், தனிநபர்களாகவும், நிறுவனங்களாகவும் அதிகம் எச்சரிக்கையாக […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்கின்றன. அமெரிக்காவும் இந்தப் போரில் நுழைவது பற்றிப் பேசி வருகிறது. அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கிறது, மேலும் இது தொடர்பாக அமெரிக்காவும் வெள்ளை மாளிகையில் ஒரு கூட்டத்தை நடத்தியது. ஈரானின் இராணுவம் மற்றும் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான இஸ்ரேலின் பிரச்சாரத்தில் சேருவதா இல்லையா என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்வார் […]

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, இஸ்ரேல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. எனினும், ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் எதையும் இஸ்ரேல் வழங்கவில்லை. இதனால், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ‘இஸ்ரேலின் இருப்புக்கே’ ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பின் இரு நாடுகளும் பரஸ்பரம் […]

ஈரான்-இஸ்ரேல் போரில் ‘இராணுவத் தலையீடு’ குறித்து அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா செய்தியாளர்களிடம் பேசிய போது “இந்த சூழ்நிலையில் ராணுவத் தலையீடு குறித்து நாங்கள் குறிப்பாக வாஷிங்டனை எச்சரிக்க விரும்புகிறோம், இது உண்மையிலேயே கணிக்க முடியாத எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும்” என்று தெரிவித்தார். புதன்கிழமை, ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இஸ்ரேலுக்கு நேரடி […]

உணவுக்காக காத்திருந்த காசா மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் உயிரிழந்தனர். 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர், உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சுமார் ஒரு ஆண்டுக்குப்பிறகு, 2024 ஜனவரியில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், இரு தரப்பும் தங்களிடம் உள்ள […]