ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு 6 ஆக பதிவாகியது. இதனால் லாகூர், இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல் ஆப்கானிஸ்தானிலும் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதி, டில்லி என்சிஆர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. […]

ஜம்மு காஷ்மீர் – ஸ்ரீநகர் செல்லும் சாலைகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் சாலைகள் முடக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர்‌ – ஸ்ரீநகர்‌ NHWT2 மரோக்‌ ரம்பனில்‌ ஏற்பட்டுள்ள நிலச்சரிவால்‌ அமர்நாத்‌ யாத்திரை செல்லும்‌ பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவின்‌ உறுதிப்படுத்தல்‌ இல்லாமல்‌ NHWT2 சாலையில்‌ வாகன ஓட்டிகள்‌, பொதுமக்கள்‌ பயணிக்க வேண்டாம்‌ என போக்குவரத்து காவல்துறை வலியுறுத்தி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஜம்முவை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் ஒரு இளைஞருடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த சிறுமியின் கழுத்தை நெறித்து அந்த இளைஞர் கொலை செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த சிறுமியின் தந்தை தாலிப் அலி இது தொடர்பாக தெரிவித்ததாவது, தன்னுடைய குடும்பத்துடன் ஜம்முவில் 8 வருட காலமாக அவர் வசித்து வருகிறார். […]

ஜம்முவில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் பொதுமக்கள் 6 பேர் காயமடைந்தனர்.. ஜம்முவின் நர்வால் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகில் இன்று காலை அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 6 பொதுமக்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.. இந்த சம்பவத்தை தொடர்ந்து, காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.. மேலும் இது குறித்து விசாரணை […]