திருமண கனவுகளுடன், நடந்து முடிந்த நிச்சயதார்த்த விழாவை கொண்டாட கடற்கரைக்குச் சென்ற, கும்பகோணத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு நாள் மட்டுமே கழிந்த நிலையில், மாப்பிள்ளை சடலமாக மீட்கப்பட்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தைச் சேர்ந்த மூர்த்தி அவர்களின் மகன் நவீன் குமார் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும் நேற்று முன்தினம், திருமண நிச்சயதார்த்த […]

தற்போது தமிழகத்தை பொறுத்தவரையில், குடிமகன்களின் எண்ணிக்கை மேன்மேலும், அதிகரித்து வருகிறது. எப்படியாவது இந்த குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று சிலர் கருதுவார்கள். ஆனால், அவர்களால் அந்த குடி பழக்கத்திலிருந்து வெளியே வரவே முடியாது. அந்த அளவிற்கு இந்த குடி பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாக இருப்பார்கள். மேலும், சிலர் போதைக்காக சில வித்தியாசமான முறைகளை கையாள்வதுண்டு. அப்படி வித்தியாசமான முறையை கையாண்ட, இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் கும்பகோணம் அருகே பரபரப்பை […]

கும்பகோணம் காசிராமன் தெருவில் இருக்கின்ற ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் சென்ற 2004 ஆம் வருடம் ஜூலை மாதம் 16ஆம் தேதி தீ விபத்து உண்டானது இந்த கொடூர தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர் 18 குழந்தைகள் காயமடைந்தனர். வருடம் தோறும் இந்த உயிரிழந்த குழந்தைகளின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன்படி 19 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. […]

கும்பகோணம் மோதிலால் தெருவில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்று இருக்கிறது. இங்கே வீட்டுக்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களையும் போன் மூலமாக வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் பெற்று அந்த பொருட்களை கடையில் உள்ள விற்பனையாளர்கள் மூலமாக வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் சூப்பர் மார்க்கெட் மேலாளருக்கு தொலைபேசியின் மூலமாக எங்களுக்கு 7️ மூட்டை அரிசி உடனடியாக இந்த […]

கும்பகோணம் பாலக்கரையில், பள்ளி தீவிபத்தினால் உயிரிழந்த 94 பள்ளிக் குழந்தைகளின் நினைவிடத்தில் இளைஞர் அரண் அமைப்பு சார்பில் ஒவியக் கண்காட்சி நடைபெற்றது.இக்கண்காட்சியை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, இளைஞர் அரண் தமிழ்நாடு அமைப்பாளர் சைமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க அமைப்புச் செயலாளர் மகிழன், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், கல்வி பாதுகாப்பு, அரசுக் கல்லூரியில் மாணவர்களுக்கான உரிமைகள், […]

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் முத்துப்பந்தல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிரமாண்டமான முத்துப்பல்லக்கு விழா நடந்தது. கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், சோழ மன்னர்களின் காவல் தெய்வமான துர்கை வடக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு எட்டு கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாகவும், லட்சுமி துர்க்கையாகவும் அருள்பாலிக்கிறார் காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து […]

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருவரஞ்சுழி எம் ஜி ஆர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி என்பவரின் மகன் ரஞ்சித்(25). இவர் மற்றும் இவருடைய உறவினர் விஷ்ணு உள்ளிட்ட இருவரும் நேற்று முன்தினம் இரவு திருவலஞ்சுழி கடை தெரு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மகன் சிரஞ்சீவி (23), கணேசன் என்பவரின் மகன் அன்பரசன்( 30), காமராஜ் மற்றும் இவருடைய […]

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் நாச்சியார்கோவில் அருகே மருதாநல்லூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரின் மகன் ராஜேந்திரன் (45) இவர் மீது கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி சிறுமி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார் என்று நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல் ஆய்வாளர் கே.ரேகாராணி மற்றும் காவல்துறையினர் […]

காரைக்காலில் இருந்து கும்பகோணத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று முன்தினம் மாலை வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுப்பிரமணியன் என்பவர் ஓட்டுனராகவும் இளமாறன் (55) என்றவர் நடத்துனராகவும் பணியாற்றி வந்தனர். இந்த பேருந்தில் அம்பரதூறு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுரேஷ் (45) என்ற பயணி ஏறினார் அதோடு அவர் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பேருந்தில் நடத்துனர் இளமாறன் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் சுரேஷை கீழே […]

கும்பகோணம் பெரிய கடை வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் வந்த 35 வயது மதிக்கத்தக்க இருவர் தங்க நகைகள் வாங்குவதைப் போல கடை உரிமையாளரிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது உரிமையாளர் மற்றும் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி விட்டு பணம் வைக்கும் பெட்டியில் இருந்த 134 கிராம் தங்க நகைகளை அவர்கள் திருடி சென்றதாக […]