சிவபெருமானுக்கு வழக்கமாக வில்வ இலை மட்டுமே அர்ப்பணிக்கப்படுகிறது என்பது பெரும்பான்மையோர் அறிந்த உண்மை. ஆனால், தமிழகத்தில் ஒன்றே ஒரு கோயிலில் மட்டுமே துளசி இலைகளால் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் மரபு தொடர்ந்து வருகிறது என்பதை பலர் அறிய வாய்ப்பில்லை. சென்னை – வல்லக்கோட்டை பாதையில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள வில்வவன நாயகி சமேத துளசீஸ்வரர் கோயில் இந்த மரபின் பிரத்தியேக சாட்சி ஆகும். இங்கு துளசீஸ்வரர் என்ற திருநாமத்தில் […]

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவில், தமிழகம் முழுவதிலும் சிவபெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் அன்னாபிஷேகம் நடைபெறும் ஒரே திருத்தலமாக விளங்குகிறது. அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வதோடு மட்டுமல்லாமல், இங்கு சிவபெருமானுக்கு அன்னம் படைத்து வழிபடும் வழக்கம், இந்த தலத்தின் பெருமையைப் பிரதிபலிக்கிறது. மற்ற கோவில்களில் ஒரே மூர்த்தி முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்றால், இங்கு சிவன், அம்பாள், தீர்த்தம் என மூன்றும் சிறப்புடனும், திருவருளோடும் திகழ்கின்றன. பதஞ்சலி […]

இந்தியாவின் திருத்தல மரபில், ஒவ்வொரு சிவஸ்தலமும் தனித்துவமான வரலாறையும் ஆன்மிக மகிமையையும் தாங்கி நிற்கிறது. ஆனால் அந்த இடங்களில் சிலவே, உண்மையிலேயே பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதிசயங்களைக் கொண்டுள்ளது. அந்த வரிசையில், ஆந்திரா மாநிலத்தின் பீமவரம் அருகே உள்ள யனமதுரு என்ற சிறிய கிராமம், உலகில் எங்கும் காண முடியாத ஒரு அபூர்வக் காட்சியை வழங்குகிறது. சிவபெருமான் தலைகீழாக காட்சி தரும் கோவில். புராணக்கதைகளின்படி, சம்பாசுரன் எனும் அரக்கன், பிரம்மனால் […]

திருவாரூர் தியாகராஜர் கோவில்… இது ஒரு கோயிலல்ல, கோடியான ஆன்மீகங்களை கொண்ட பெருஞ்சமூகம். பெரிய கோவில் என்றால் நம் அனைவருக்கும் நினைவிற்கும் வருவது தஞ்சை பெரிய கோவில் தான். ஆனால் சைவ மரபு படி பெரிய கோவில் என்பது திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலை மட்டுமே குறிக்கும்.சைவ மரபுப் படி கோவில் என்பது சிதம்பரத்தையும், இறைவன் உறையும் மூலஸ்தானம் திருவாரூர் என்றும் சொல்லப்படுகிறது.  365 லிங்கங்கள், 86 விநாயகர் சிலைகள், […]

பலர் தங்கள் வீடுகளில் சிவபெருமான் நடனம் ஆடும் படங்களை வைத்திருக்கலாம்… வாஸ்து சாஸ்திரத்தின் படி, தாண்டவம் ஆடும் இந்த சிவபெருமான் மிகவும் கோபமான, உக்கிரமான வடிவமாக இருக்கிறார். இந்த படம் தோற்றத்தில் கவர்ச்சிகரமானதாக தோன்றலாம், ஆனால் இது வீட்டின் வாஸ்துவை கெடுத்துவிடும், இது வீட்டிற்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, சிவனின் கோப வடிவத்தை வீட்டில் வைத்திருப்பதால் வீட்டில் அமைதியின்மை அதிகரிக்கும்.. சிவபெருமானின் […]