காதல் மற்றும் திருமணம் தொடர்பான சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் நிலையில், பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது ரூபியும், இரண்டு குழந்தைகளின் தாயான சந்தியாவும் அருகருகே வசித்து வந்துள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட […]

