fbpx

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் நோன்பு சடங்குகளை நிறைவேற்ற ஏதுவாக மார்ச் 2 முதல் 31 வரை 30 நாட்கள் மாலையில் வழக்கமான அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்பு சடங்கு, …

புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம்களுக்கு நோன்புக் கஞ்சித் தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம் மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு, பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி, தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025-ம் ஆண்டிலும் …

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க 586 பங்களாதேஷ் நாட்டினர், 318 ரோஹிங்கியாக்கள், 2021 முதல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில்வே பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2021ம் ஆண்டு முதல் 586 பங்களாதேஷ் நாட்டினர், 318 ரோஹிங்கியா சமூகத்தினர் உட்பட 916 நபர்களைக் கைது செய்துள்ளது. இது தேசத்தைப் பாதுகாப்பதற்கான ரயில்வே பாதுகாப்புப் படையின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. …

மத்திய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி, ஹஜ் 2025 பயணத்துக்கான 2வது காத்திருப்புப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி, ஹஜ் 2025 பயணத்துக்கான 2வது காத்திருப்புப் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து 3,676 விண்ணப்பதாரர்களுக்கு …

இந்திய ஹஜ் குழுவானது புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 23.09.2024 வரை நீட்டித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்திய ஹஜ் குழுவானது. புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 23.09.2024 வரை நீட்டித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு …

2025- ஹஜ் பயணத்திற்காக, இந்தியாவுக்கு சவுதி அரேபியா அரசு 1,75,025 பேருக்கான ஒதுக்கீட்டை ஒதுக்கியுள்ளது. இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கான விண்ணப்ப விநியோகத்தை மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்.

முதன்முறையாக, இந்திய ஹஜ் கமிட்டியின் இணையதளத்துடன் கூடுதலாக …

Pakistan: பாகிஸ்தானில் இந்துக்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவருவதாகவும், முஸ்லிம் எண்ணிக்கை 96.35 சதவீதமாக சரிந்துள்ளதாகவும் 7வது மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் 7வது மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அந்த பட்டியல் நேற்று வெளியானது. அதில் 2023 கணக்குப்படி பாகிஸ்தானில் 24 கோடி மக்கள் தொகை உள்ளது தெரிய வந்துள்ளது. …

காவல்துறையில் முஸ்லீம்கள் தாடி வைக்க தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவல்துறை அதிகாரியான அப்துல் காதர் இப்ராஹிம், கடந்த 2018ம் ஆண்டு தாடி வைத்திருந்ததால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பை …

தெலங்கானா மாநிலத்தில் அமலில் உள்ள முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நாட்டிலேயே தெலங்கானா மாநிலத்தில் தான், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு …

சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள ஆறு சமுதாயத்தினருக்கு ‘சீகோ அவுர் கமாவோ’, ‘யு.எஸ்.டி.டி.ஏ.டி’ மற்றும் ‘நயி மன்சில்’ போன்ற பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை சிறுபான்மையின நலத்துறை அமைச்சகம் செயல்படுத்தியது. இதில் குறைந்தபட்சம் 30% இடங்கள் பெண் பயிற்சியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

இவை தவிர, சிறுபான்மைப் பெண்களின் தலைமைத்துவ மேம்பாட்டிற்காக பல்வேறு தலைப்புகளில் தலைமைத்துவப் பயிற்சி மூலம் பெண்களுக்கு அதிகாரம் …