நாமக்கலில் ஒரு முட்டை விலை 595 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு விநியோகம் செய்யப்படுவதுடன், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன. 2024 டிசம்பர் 9-ம் தேதி ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 590 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதுவே, […]

நாமக்கல் மாவட்டம் Excel பொறியியல் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை. கல்லூரியில் உணவு சமைக்கவும், கல்லூரியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் Excel பொறியியல் கல்லூரி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 1000-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சிலர், இக்கல்லூரிக்குச் சொந்தமான விடுதியில் தங்கிப் […]

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியை சேர்ந்த 1,000 பேர் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி ஏற்பாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக்கட்சியை சேர்ந்த 1,000 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அதிமுகவை பொறுத்தவரை சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். தலைமைக்கு விசுவாசமாக, கட்சிக்கு விசுவாசமாக, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அனைவருக்கும் உயர்ந்த பதவி […]

காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால், 5 மாநிலங்களில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்ள காஸ் டேங்கர் லாரிகள், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு […]

நாமக்கல்லில் நடந்தது கிட்னி திருட்டு அல்ல, முறைகேடு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு பாஜக முன்னாள் தலைவர் மாநில அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் இருக்கும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறி வைத்து அவர்களிடம் இருந்து சிறுநீரகத்தைப் பெற்று விற்பனை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் […]

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி(35). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்களும் உள்ள நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது கணவர் மாரிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கூலி வேலைக்கு சென்று அருள்ஜோதி மகள்களை காப்பாற்றி வந்துள்ளார். மகன் உயிரிழந்ததை பயன்படுத்திக் கொண்ட மாமனார் சேட்டு (65) மருமகளுக்கு பல வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தமது பெற்றோரிடம் சொல்லி அழுத […]

இந்திய ஆன்மிக மரபில், மலை மீது எழுச்சி தரும் கோயில்கள் என்றும், பக்திக்கு வலிமை சேர்க்கும் இடங்களாகவும் பெருமை பெற்றுள்ளன. அவ்வாறானதொரு திருத்தலமாக, நாமக்கல் அருகேயுள்ள கூலிப்பட்டியில் அமைந்துள்ள கந்தகிரி பழனி ஆண்டவர் கோயில் மக்கள் நம்பிக்கையையும், பக்தியின் ஆழத்தையும் தழுவிய மலைமேல் காட்சியளிக்கிறது. மூன்று நூற்றாண்டுகளாக பக்தர்களை தன்னை நோக்கி இழுக்கும் இத்தலம், முருகபெருமானின் அருள் பெரும் இடமாக விளங்குகிறது. இங்கு ‘அண்டி கோலத்தில்’ மலைமீது திகழும் முருகனைக் […]