திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கடை தெருவில் பகவான் மெஸ் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் கண்ணன் (53). இவருடைய மகன் சூரிய பிரகாஷ்( 23) உள்ளிட்ட இருவரும் இணைந்து அந்த கடையை கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இவர்களின் வீட்டில் பழங்கால ஐம்பொன் சிலை மற்றும் 1000 வருடங்கள் பழமையான செப்பு நாணயங்கள் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு […]