இந்தியாவில் பல முக்கிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இந்தியக் கிளையின் முன்னாள் தலைவரான சாகிப் நாச்சன், டெல்லி திகார் மத்திய சிறையில் உயிரிழந்துள்ளார். சிறையில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவருக்கு, மருத்துவ பரிசோதனையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. உடனடியாக சாஃப்தார்ஜங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத பாதையில் சென்ற பிசினஸ்மேன்: மகாராஷ்டிரா […]