சாதி அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; மாணவர்கள் அனைவரும் அரசால் தெரிவிக்கப்பட்ட சீருடையையே அணிந்து வர வேண்டும். மாணவர்கள் முக்கால் அளவுள்ள மற்றும் இறுக்கமான கால்சட்டையை அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். சட்டை மிகவும் இறுக்கமாக இருக்க கூடாது. கைப்பகுதி முழங்கை அளவுக்கு […]

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (42). ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். பாலசுப்பிரமணியனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் கணவருடன் ஏற்பட்ட தகறாரில் முத்துலட்சுமி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் இருவரையும் அழைத்து மகளிர் […]

தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.  ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’ என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பல்வேறு […]

இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியாகி இருக்கிறது இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விவரங்கள் எப்படி இருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இன்று தமிழகம் மற்றும் புதுவையில் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக 22,400 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்த நிலையில், 94.19% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் […]

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி கொடூரமான முறையில் துன்புறுத்துவதாக உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. ஆகவே அவர் மீது பாதிக்கப்பட்ட 8க்கும் அதிகமானவர்கள் புகார் வழங்கினர். இந்த விவகாரம் மாநில அளவில் மிகப் பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. இந்த நிலையில் தான் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ எஸ் பி ஆக பணியாற்றி வந்த பல்வீர்சிங் விசாரணை கைதிகளின் பற்களை […]

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாவட்ட நேரு யுவகேந்திரா கர்ப்ப விருட்சக நற்பணி மன்றத்துடன் ஒன்றிணைந்து, பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு மழை நீர் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை திருநெல்வேலி மாவட்ட காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, தலைமையேற்று தொடங்கி வைத்தார். நீரின்றி என்ற பெயரில் ஓவிய போட்டியும், நாளைய தலைமுறையினருக்கு நீர் என்கின்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், நீர் விட்டு செல்வீரா நீரை என்கின்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் […]

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் நோயாளிகள் அதிக அளவில் வந்து செல்லும் மருத்துவமனையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. இதன் அருகே தற்போது பல்நோக்கு மருத்துவமனை தனி வளாகத்தில் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சராசரியாக 2000க்கும் அதிகமானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றன. இத்தகைய நிலையில், இந்த மருத்துவமனையின் […]

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இவருடைய மனைவி அய்யம்மாள் இவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் இருக்கின்றன. இத்தகைய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்த அய்யம்மாள் திருநெல்வேலி அண்ணா நகரில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார். இத்தகைய சூழ்நிலையில் நேற்றைய தினம் அய்யம்மாள் பணி முடிவடைந்து வீடு திரும்பியபோது அவரை இடைமறித்த […]

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த ராஜபாண்டியன் இவர் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவராக இருக்கிறார். மேலும் இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசித்து வரும் பாலகுமாரன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இத்தகைய சூழ்நிலையில் தான் பாலகுமாரின் மனைவி கீதா தன்னுடைய அவசர தேவைக்காக ராஜபாண்டியனிடம் மூன்று லட்சம் ரூபாய் வட்டிக்கு பணம் […]

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே இருக்கின்ற ஸ்ரீரங்க நாராயணபுரத்தைச் சார்ந்தவர்கள் தங்கராஜா, சுகந்தி தம்பதியினர் இவர்களுடைய மகன் முருகன் (24) டிப்ளமோ பட்டதாரியான இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் ஒப்பந்தம் நிறுவன மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய வீட்டிற்கு அருகில் முருகேசன், பத்மா தம்பதியினர் வசித்து வருகிறார்கள்.இவர்களுடைய மகளான சுமிதா (19) என்ற இளம் பெண் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகின்றார். இந்த நிலையில் […]