கோயமுத்தூர் மாவட்டம் கூடலூர் கவுண்டம்பாளையம் காஞ்சிமலை பகுதிக்கு செல்லும் வழியில் இருக்கின்ற தனியாருக்கு சொந்தமான இடத்தில் 38 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு, சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் அங்கிருந்த சடலம் தொடர்பாக விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி என்ற நபர் தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது. […]