நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்த சூழலில், மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. கேள்வி நேரத்துக்கு பிறகு, பகல் 12 மணிக்கு ஆபரேஷன் […]

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் ராணுவத்தின் வலிமை பாதுகாப்பு உத்தி உள்ளிட்டவைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) உருவாக்கி வருகிறது என செய்தி நிறுவனமான PTI தெரிவித்துள்ளது. இந்த பாடத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும். ஒன்று 3ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மற்றொன்று 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் […]

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அஜித் தோவல் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி மெட்ராஸின் 62வது பட்டமளிப்பு விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவரங்களை வெளியிட்டார். மேலும், உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பேசிய அஜித் தோவல், ஆபரேஷன் சிந்தூரின் நடவடிக்கையை வெற்றியைப் பாராட்டினார்.. பாதுகாப்பு திறன்களில் […]

புதிய யுக இராணுவ தொழில்நுட்பங்கள் குறித்த FICCI ஏற்பாடு செய்த உயர்மட்ட பாதுகாப்பு நிகழ்ச்சியில், துணை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பாகிஸ்தான், சீனா மற்றும் துருக்கி இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார். ஆபரேஷன் சிந்தூரின் போது காணப்பட்ட நவீன போர் சவால்களை கருத்தில் கொண்டு இந்தியா தனது வான் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப […]

ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு குவாட் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து குவாட் குழுவின் (அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா) வெளியுறவு அமைச்சர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். கண்டிக்கத்தக்க செயலுக்கு பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும் “ எல்லை தாண்டிய […]

இந்தியாவுடனான இராணு மோதல்களின் போது, ​​தங்களுக்கு முக்கியமான உளவுத்துறை தகவல்களை சீனா வழங்கியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார். இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்த காலங்களில் பாகிஸ்தான் தனது மூலோபாய தயார்நிலையை வலுப்படுத்த உதவும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய விவரங்கள் இந்தத் தகவலில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.. ஒரு நேர்காணலில், இந்தியாவுடனான ஒரு குறுகிய மோதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்ததாகவும், இந்தியாவின் […]

இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 20) ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூருக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றடைந்தார். சர்வதேச யோகா தினமான இன்று சனிக்கிழமை (ஜூன் 21) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்று, உதம்பூர் கண்டோன்மென்ட்டில் உள்ள ஆயுதப்படை வீரர்களுடன் கலந்துரையாடவுள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூன் 20) உதம்பூரில் உள்ள வடக்கு கட்டளை தலைமையகத்தில் ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய அவர், புதிய இந்தியா உறுதியானது என்பதற்கும், இனி […]

இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை, S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் பயன்படுத்தி 6 பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தி, 4 முக்கிய ரேடார் மையங்களை அழித்தது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், இந்த தாக்குதல்களில் இந்தியா ரஃபேல் போர் விமானங்கள், தரையிலிருந்து […]