தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வெட்டுவான் கோவில், பெரும் பாறையை மேலிருந்து கீழாக குடைந்து செதுக்கப்பட்ட தனித்துவமான கட்டட கலை அமைப்பால் ‘தென்னிந்தியாவின் எல்லோரா’ மற்றும் ‘மினி கைலாசா’ என்று போற்றப்படுகிறது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் மாறஞ்சடையனால் தொடங்கப்பட்ட இந்தக் கோவில், ஏதோ ஒரு காரணத்தால் முழுமையடையாமல் முற்றுப்பெறாத நிலையிலேயே விடப்பட்டது. பண்டைய காலத்தில் ‘அரைமலை’ என்று […]