தமிழ்நாட்டில் ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்கு துறையின் தரவு தளத்திலிருந்து ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் எல்லாம் எடுக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்தகைய நிலையில் தான் […]
pension latest news
அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் மே மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அகில இந்திய அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் 17.05.2023 அன்று பகல் 11:00 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம் சென்னை என்கிற […]
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கை 31, மார்ச், 2023-ன் படி, 5.20 கோடியை கடந்தது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டனர். இது அதன் முந்தைய நிதியாண்டை விட, 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகும். அடல் ஓய்வூதியத் திட்டத்தில் மேலாண்மையின் கீழ், இதுவரை மொத்த சொத்து மதிப்பு ரூ.27,200 கோடியாக உள்ளது. இந்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 8.69 சதவீதம் முதலீட்டு லாபம் […]
அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கான ஓய்வூதியம் மேலும் உயர்த்தி வழங்கப்படும் […]
விளையாட்டு வீரர்கள் பென்ஷன் பெறுவதற்கு ஏப்ரல் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 2023-2024 ஆம் ஆண்டிற்கான நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தினை சார்ந்த முன்னாள் தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளையாட்டுத் துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத […]
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக மகாராஷ்டிர நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்து வருவதாகவும், மகாராஷ்டிராவில் ஆசிரியர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கான திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறினார். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முந்தைய ஓய்வூதியத் திட்டம், உதவிபெறாத நிறுவனங்கள், ஆங்கில […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நாடு முழுவதும் பல மாநில அரசு ஆலோசித்து வருகிறது. . நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமலில் உள்ளது. இதனால் பல மாநிலங்களில் இன்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் இந்த மாதம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் லட்சக்கணக்கான […]
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வரவேற்கிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரம், வழக்கமாக வழங்கக்கூடிய அகவிலைப்படியை, மத்திய அரசின் அறிவிப்புப்படி கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் வழங்காமல், […]
சென்னை துறைமுக ஆணையம் மற்றும் கப்பற்கூட வாரியம் ஆகியவற்றின் ஓய்வு பெற்றவர்களுக்கான, 2022 ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி 1.11.2022 முதல் தொடங்கியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பித்தலை தவிர்க்கும் வகையில், கீழ்கண்ட வழிமுறைகளை ஓய்வூதியதாரர்களின் வசதியை கருதி சென்னைத் துறைமுக ஆணையம் செய்துள்ளது. எப்படி அனுப்புவது…? ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், தங்களின் ஆயுள்சான்றிதழை கணினி மூலம் […]
பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு அமைச்சரவை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு அமைச்சரவை செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. இதற்கான அறிவிப்பை வெளியிட மாநில அரசு தயாராகி வருகிறது என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மான் தெரிவித்தார். ஒரு வரைவு அறிவிப்பு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டதாகவும், ஆனால் கூட்டத்தின் அறிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்ட பின்னரே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . புதிய […]