கடந்த 8 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 3 முறை உயர்த்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ. 100-ஐக் கடந்துள்ளது. மே 23 அன்று, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 99.51-ஐ எட்டியது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தைத் தொடர்ந்து, வர்த்தக மற்றும் தொழில் சபை (Chamber of Commerce and Industry), இவ்விரண்டையும் ஜிஎஸ்டி (GST) வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் […]

எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி உள்ளது.. உலகளாவிய எரிசக்தி விலை அதிகரித்து வருவதன் விளைவாக இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது; இதனால் ஏற்பட்ட கூடுதல் சுமையை, நிறுவனங்கள் ஓரளவுக்கு நுகர்வோர் மீது சுமத்தியுள்ளன. இந்த சமீபத்திய விலை மாற்றத்திற்குப் பிறகு, தேசியத் தலைநகரான டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை தற்போது ரூ. 97.77 ஆக உள்ளது. டீசல் விலையும் […]

டீசல் மற்றும் பெட்ரோல் மீதான ‘சிறப்பு கூடுதல் கலால் வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளது.. தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா-ஈரான் போரினால் ஏற்பட்ட விநியோகத் தடைகளுக்கு மத்தியில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரின் காரணமாக மக்கள் பீதியுடன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.. இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அரசு ரூ.10 குறைத்துள்ளது. […]

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தியாவிடம் தற்போது 25 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உடனடியாக உயர்த்தும் திட்டம் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 80 அமெரிக்க டாலர் என்ற நிலைக்கு […]