ஹரியானாவில் குண்ட்லி-மானேசர்-பல்வால் (KMP) விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை நடந்த கோர விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட 3 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மண்டோத்தி கிராமம் அருகே பக்தர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனம் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. […]

