ஐஐடி பாம்பே மாணவர் சாஹில் வகோடே உயிரிழந்த சம்பவத்தில், பேராசிரியர் சூர்யநாராயண் துல்லா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் மேலும் 2 பேர் அடையாளம் குறிப்பிடப்படாத குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 20 வயதான சாஹில் வகோடே, ஐஐடி பாம்பேவின் எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் இரண்டாம் ஆண்டு எம்எஸ்சி படித்து […]