ராசிபுரம் அருகே மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு வன்கொடுமை செய்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மணிகண்டன். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டியப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் விடுப்பு எடுத்து இருந்ததால் அங்கு மாற்று பணிக்காக மணிகண்டனை நியமித்திருந்தது மாவட்ட […]

இத்தாலி நாட்டின் ஒரு நகரத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அரசியல்வாதிகளை கூண்டிற்குள் அடைத்து வைத்து தண்ணீரில் மிதக்க விடும் வினோதமான தண்டனை நடைமுறையில் இருக்கிறது. சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகள் தங்கள் கொடுக்கும் வாக்கினை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை உணர வேண்டும் என்பதற்காக இப்படியான வினோதமான தண்டனை அந்த நகரில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த தண்டனையானது பார்ப்பதற்கும் கேள்விப்படுவதற்கும் ஒரு தீவிரமான தண்டனை […]

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஈவு இரக்கமில்லாமல் கணித ஆசிரியர் கொடுத்த  தண்டனையால் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காரைக்குடியைச் சார்ந்த  இளையராஜா மற்றும் பாசமலர் தம்பதியின் ஒரே மகன் கவிப்பிரியன்  வயது 13. இந்தச் சிறுவன் அங்குள்ள வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான். இந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக  இருந்து […]

குவைத் நாட்டில் ஒரே நாளில் ஏழு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கின்றன. ஒரே நாளில் குவைத் நாட்டில் 7 நபர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இதுகுறித்து, அந்நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, பல்வேறு குற்றங்களுக்காக இந்த தூக்கு தண்டனையானது அளிக்கப்பட்டது என்றும், தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட ஏழு நபர்களில் இரு பெண்களும் இருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், […]

திருத்தணி பகுதியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் திருத்தணியை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து சுமார் 1000மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களில் சிலர் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் நல்ல டிப்டாபாக கிளம்பி வருகின்ற நிலையில், பள்ளிக்கு செல்லாமல் ரயில், பேருந்து நிலையம் மற்றும் பூங்கா என பொது இடங்களில் ஜாலியாக சுற்றி திரிந்து வருகின்றனர். […]