தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் […]

இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.. தேனி, திண்டுக்கல், […]

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ நேற்று மாலை, வடக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக,மேற்கு வங்கம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய வங்கதேச பகுதிகளில்‌ நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில்‌ மேற்கு வங்க பகுதிகளில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்‌. […]