புதிதாகத் தயாரிக்கப்பட்ட சூடான தேநீரை குடிப்பதற்கு முன் சில நிமிடங்கள் ஆறவிட வேண்டும் என்பதை புதிய ஆராய்ச்சி ஒன்று வலியுறுத்துகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், மிகவும் சூடான பானங்களைக் குடிப்பதற்கும், ‘உணவுக்குழாய் ஸ்கேமஸ் செல் கார்சினோமா’ (Oesophageal Squamous Cell Carcinoma – SCC) என்ற புற்றுநோய் வகைக்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ‘சர்வதேச புற்றுநோய் இதழில்’ வெளியிடப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சிக்காக, இங்கிலாந்து […]