பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சேவைகளை குடிமக்கள்‌ எளிதில்‌ பெறும்‌ வகையில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஒவ்வொரு வட்டத்திலும்‌ மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ ஒவ்வொரு மாதமும்‌ நடத்தப்படும்‌ என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மே 2023 மாதத்திற்கான மாதாந்திர பொதுவிநியோகத்‌ திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ சென்னையில்‌ உள்ள 19 மண்டல உதவி ஆணையர்‌ அலுவலகங்களில்‌ இன்று காலை 10.00 மணி முதல்‌ பிற்பகல்‌ 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. […]

காஞ்சிபுரத்தில் வரும் 13-ம் தேதி பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌, 13.05.2023 அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம்‌ வட்டத்தில்‌ திருப்புட்குழி, உத்திரமேரூர்‌ வட்டத்தில்‌ தோட்டநாவல்‌, வாலாஜாபாத்‌ வட்டத்தில்‌ புத்தகரம்‌, திருப்பெரும்புதூர்‌ வட்டத்தில்‌ ஓ.எம்‌.மங்கலம்‌, குன்றத்தூர்‌ வட்டத்தில்‌ ஒரத்தூர்‌ ஆகிய கிராமங்களில்‌ பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. மேற்கண்ட கிராமங்களில்‌ வசித்துவரும்‌ பொது மக்கள்‌ தங்கள்‌ குடும்ப அட்டையில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, […]

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம்‌ 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை சிலர்‌ முறைகேடாக கள்ளச்சந்தையில்‌ […]

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் யுவ நிதி’ என்னும் திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கர்நாடகாவுக்கு வந்த, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தனது கட்சி, ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவை கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றும் என்று கூறியுள்ளார். கோலாரில் நடைபெற்ற பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவர் 4 தேர்தல் […]

65 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ல் இடம் பெற்றுள்ள பிரிவுகளின்படி, கிராமப்புறங்களில் 75 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 50 சதவீதம் பேரும் மானிய விலையில், உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு அந்த்யோதயா அன்ன யோஜனா, […]

தமிழகம் முழுவதும் இன்று முதல் பொதுவிநியோக திட்டத்தின்‌ தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்‌ பயன்பெறும்‌ முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள்‌ மற்றும்‌ அந்தியோதிய அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருள்‌ வழங்கல்‌ துறை சார்பாக நியாயவிலை அங்காடிகள்‌ மூலம்‌ ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம்‌ செய்யப்பட உள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும்‌ திட்டத்தில்‌ இரத்த சோகை மற்றும்‌ நுண்ணூட்ட சத்து குறைபாட்டை போக்க, இரும்பு சத்து, போலிக்‌ அமிலம்‌ மற்றும்‌ […]

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நோன்பு நோற்கும்‌ இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும்‌ பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால்‌ வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டுகளைப்‌ போலவே, 2023 ஆண்டிலும்‌ ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும்‌ என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள்‌ வந்துள்ளன. 2023-ம் ஆண்டு, ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு நோற்கும்‌ இஸ்லாமிய மக்களுக்கு […]

ரேஷன் பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத்திட்டம்‌ / சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை சிலர்‌ முறைகேடாக கள்ளச்சந்தையில்‌ விற்று […]

தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின்‌ கீழ்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில்‌ ஒரு குடும்பத்துக்கு மாதம்‌ ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்‌) விநியோகம்‌ செய்யும்‌ பொருட்டு தருமபுரி மாவட்டத்தின்‌ மாதாந்திர தேவை 440 மெட்ரிக்‌ டன்‌ எனவும்‌, இதற்காக ராகி சிறு தானியத்தை சிறு, குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல்‌ செய்திட தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிப கழகத்திற்கு […]

கோதுமை, மைதா போன்றவற்றின் விலையை குறைப்பதற்காக 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை வெளிச்சந்தை திட்டம் மற்றும் மாநில அரசுகள் கேந்திரிய பந்தர், தேசிய நுகர்வோர் கூட்டுறவு அமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு மற்றும் மாநில கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த […]