தென் ஆசியாவில் பயங்கரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 37-வது அறிக்கையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 10-ஆம் தேதி டெல்லி செங்கோட்டைக்கு அருகே நடந்த தாக்குதலில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-மொஹம்மது (JeM) பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.. ஒரு ஐநா உறுப்பு நாடு, அந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமதுஅமைப்பே பொறுப்பு எனக் கூறியதாக ஐநாவுக்கு தகவல் வழங்கியுள்ளது. இதன் மூலம், டெல்லி […]
red fort blast
ஃபரீதாபாத் அல் ஃபலாஹ் மருத்துவ கல்லூரி மருத்துவர்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் வெளிநாட்டு நபர் ஒருவர், செங்கோட்டை வெடி குண்டு வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு குண்டு தயாரிக்கும் முறைகள் பற்றிய விரிவான வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய உமர் நபியின் சக ஊழியரான முஜம்மில் அகமது கனாய் (Muzammil Ahmad Ganai), வெளிநாட்டை சேர்ந்த தீவிரவாத செயலை உத்தரவிடும் நபரிடம் இருந்து இருந்து குறியாக்கப்பட்ட (encrypted) […]
டெல்லி செங்கோட்டைக்குப் அருகே ஏற்பட்ட கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக, பத்தன்கோட்டைச் சேர்ந்த ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 45 வயதான டாக்டர் ரயீஸ் அஹ்மது பட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணையில், அவருக்கும் மற்றும் வெடிப்புக்கு பொறுப்பானதாக கைது செய்யப்பட்ட டாக்டர் உமர் நபி ஆகியோருக்கிடையே தொடர்புகள் இருந்ததாக அதிகாரிகள் கூறியதால், அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். டாக்டர் ரயீஸ் அஹ்மது பட் தற்போது பத்தன்கோட்டில் […]
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகிலுள்ள நவ்காம் பகுதி காவல் நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தற்செயல் வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 29 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஹரியானாவின் பாரிதாபாதில் பறிமுதல் செய்யப்பட்ட ‘வைட் காலர்’ பயங்கரவாத நெட்வொர்க் வழக்கில் பெருமளவு வெடி மருந்து குவியலில் இருந்து மாதிரிகளை எடுக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் […]
டிசம்பர் 6ம் தேதி டெல்லி உட்பட நாடு முழுவதும் 32 கார்களை உள்ளடக்கிய ஆறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக வரலாற்றில் மிக மோசமான தொடர் குண்டுவெடிப்பாக இருக்கக்கூடிய தாக்குதலில் இருந்து இந்தியா மயிரிழையில் தப்பித்தது,3,200 கிலோகிராம் வெடிபொருட்களுடன் நிரப்பப்பட்ட 32 கார் குண்டுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பயங்கரவாத சதித்திட்டத்தை இந்திய உளவுத்துறை அமைப்புகள் முறியடித்துள்ளன. இந்த திட்டமிடப்பட்ட வெடிப்புகள் ஆயிரக்கணக்கான […]
செங்கோட்டை கார் வெடிப்பு வழக்கு விசாரணையில் திய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச எதிர்-தீவிரவாத படை (ATS), டெல்லி போலீஸ் ஸ்பெஷல் செல் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் இணைந்து கான்பூரில் உள்ள கார்டியாலஜி இன்ஸ்டிட்யூட்டில் டாக்டர் முகம்மது அரீஃப் என்பவரை கைது செய்துள்ளன. அரீஃப் தொடர்ந்து டாக்டர் ஷாஹீனுடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணை அமைப்புகள் கூறுவதாவது, ஷாஹீனின் மொபைல் போன் பதிவுகளை ஆய்வு செய்தபோது அரீஃப்பின் […]
நவம்பர் 10 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு முழு நாட்டையும் உலுக்கியது. இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.. இருப்பினும், விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. குண்டுவெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால் பல வாகனங்கள் சேதமடைந்தன, சுற்றியுள்ள பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 24 க்கும் மேற்பட்டோர் […]
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் இந்த வெடிப்பு சம்பவத்தை “தீவிரவாத தாக்குதல்” என அறிவித்துள்ளது. இந்த கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் […]
நாட்டின் பல முக்கிய விமான நிலையங்களுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. மாலை 3.40 மணி முதல் 3.45 மணி வரை டெல்லி, மும்பை, சென்னை, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த மின்னஞ்சல் செய்தியின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்ய வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டு குழு (BTAC) உடனடியாக செயல்படுத்தப்பட்டது. விரிவான […]
டெல்லி கார் வெடிப்பு வழக்கில் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு நிற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர். வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 உடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றொரு சிவப்பு நிற காரையும் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, டெல்லி போலீசார் தேசிய தலைநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சாவடிகள் மற்றும் எல்லை சோதனைச் சாவடிகளில் […]

