மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மாவட்டத்தில் யுவராஜ் என்ற 23 வயது இளைஞரின் தந்தை ஐந்தாண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். அதன் பின் தாய் ரத்னா தனியாக சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். கணவர் இறந்த பின்னர் உறவினர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. அத்துடன் நல்ல கெட்ட காரியங்களுக்கு கூட ரத்னாவை அழைக்காமல் உதாசீனப்படுத்தி வந்துள்ளனர். கணவன் இல்லாத காரணத்தால் அவர் பல விழாக்களில் ஒதுக்கி வைக்கப்பட்டு வந்துள்ளார். […]