சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்பார்கள். மறுநாள் 17-ந்தேதி முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள். நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு நடை […]

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் பதிப்பதற்காக தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய 30 கிலோ தங்கம் முற்றிலும் மாயமாகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அதில் 5 கிலோ கிராம் துவாரபாலகர் சிலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த செந்தில்நாத் என்பவர் தெரிவித்துள்ளார். சபரிமலை ஸ்ரீகோயிலில் தங்கத் தகடுகள் பதிக்க வேண்டும் என்று கடந்த 30 வருடங்களுக்கு முன் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்தது. இதுகுறித்து அறிந்த பெங்களூருவைச் சேர்ந்த பிரபல […]

சபரிமலையில் இந்த ஆண்டு ஆடி மாத பிறப்புக்கும் முன்பாக வரும் ஜூலை 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை மாளிகைபுரம் கோயிலின் இடது புறத்தில் அமைந்திருந்த நவக்கிரக மண்டபத்தை மற்றொரு இடத்தில் மாற்ற வேண்டும் என தேவப்பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய நவக்கிரக கோயில் ஒரு தனி இடத்தில் கட்டப்படத் தொடங்கியது. தற்போது அதன் கட்டுமானம் நிறைவடைந்து, பிரதிஷ்டை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் […]