சென்னையில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த காரணத்தால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி உத்தரவிட்டனர். மழையின் அளவு குறைவானதால் இன்று சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் […]

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும். 2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு , பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது . கடந்த வாரம் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தினால் முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பள்ளிக்கல்வித்துறை […]

புதிய வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குநரகம் முதல்வர் என் ரங்கசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். கடந்த வாரத்தில் சுமார் 400 […]

முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று அங்கு ஆய்வை மேற்கொண்டார். அங்கே கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியக பணிகளை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அத்துடன் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூருக்கு சென்று அதன் நினைவுகளை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் தான் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருக்கின்ற பள்ளிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 4ம் தேதி ஆய்வு நடத்துகிறார் […]

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கிய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த மண்டலமானது திரிகோணமலைக்கு அருகே 110 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாணவர்கள் […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த […]

கடும் குளிர் காரணமாக, உத்தரப் பிரதேசத்தில் பள்ளி செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ‌‌ உத்தரப் பிரதேசத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக, லக்னோவில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி நேரங்களை மாற்ற முடிவு செய்துள்ளது. வகுப்புகள் காலை 10 மணிக்குத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு முடிவடையும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ மட்டுமின்றி, கோரக்பூர் மாவட்டத்தின் […]

பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டித்து பீகார் மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டித்து உத்திர பிரதேஷ், பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குறைந்த வெப்பநிலை மற்றும் கடுமையான குளிர் காரணமாக, பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து […]

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் ஜனவரி 8 ஆம் தேதி விடுமுறை வழங்கப்படுவதாக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைனில் வகுப்புகளை எடுக்க வேண்டும். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும். இதேபோல், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளும் […]

குளிர் காலநிலையைக் கருத்தில் கொண்டு நொய்டாவில் 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 01, 2023 வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குளிர் காலநிலையைக் கருத்தில் கொண்டு நொய்டாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகளை இடைநிறுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவின்படி, 2023 ஜனவரி 1 வரை அனைத்து வாரியங்களின் […]