தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டது. விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும்என பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது தாமதமாகும் என தகவல்கள் வெளியானது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழ்நாடு முழுவதும் ஜூன் 1-ம் தேதி 6-ம் வகுப்பு […]
school students
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு மாநில அரசுதான் கட்டணம் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீதம் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. சீருடை மற்றும் புத்தகங்களுக்காக 11,977 ரூபாய் கட்டணமாக செலுத்தக்கூடிய தனியார் பள்ளியின் உத்தரவை எதிர்த்த வழக்கில், RTE.ல் சேரும் மாணவர்களுக்கு சீருடை புத்தக கட்டணங்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டியது அரசின் கடமை இன்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 2022 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்கள் அருகிலுள்ள […]
சென்னையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தின் தபால் தலைப் பிரிவு கோடைக்கால தபால் தலை முகாமை நடத்த உள்ளது. மூன்று பிரிவுகளாக இந்த முகாம் நடைபெற உள்ளது. முதல் பிரிவு 11.05.2023 முதல் 13.05.2023 வரையும், இரண்டாவது பிரிவு 18.05.2023 முதல் 20.05.2023 வரையும், மூன்றாவது பிரிவு 25.05.2023 முதல் 27.05.2023 வரையும் நடைபெறும். இந்த முகாம் காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 வரை பயிற்சி நடைபெறும். […]
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த அன்று மாலை 4 மணிக்குள் தோல்வி அடைந்த மாணவர்களை உடனடியாக மறு தேர்விற்கு தயார் செய்ய வேண்டும். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆங்கிலப் பயிற்சிகளுக்கு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து தவறாமல் பங்கேற்க செய்ய வேண்டும். நுழைவுத் தேர்வுவிவரங்களை கூறுவதும், முதன்மைக்கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்துச் […]
ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற மாணாக்கர்கள் ஆதாருடன் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க வேண்டும். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2022-2023 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு, இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய […]
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி 6 முதல் 18 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க வேண்டும். அதன்படி ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து, மாநகராட்சி 7 ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், கணக்கெடுப்பு களப்பணி ஏப்ரல் 2023 முதல் இரண்டு வாரங்களிலும் மற்றும் மே 2023 இறுதி வாரத்திலும் […]
தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தனியார் பள்ளி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009இன் படி 2023-24ஆம் கல்வி ஆண்டில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும், 1-ம் வகுப்பு முதல் நடைபெற்று […]
ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த அரசு தொடக்கப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஒருவருக்கு போக்சோ நீதிமன்றம் 10 வருட காலம் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சென்ற 2015 ஆம் வருடம் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தபோது குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தலைமை ஆசிரியர் மாணவிகளை ஆடைகளை களையச் சொல்லி வற்புறுத்தி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் […]
“ தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று சென்னை ஐஐடி வளாகத்தில், “அனைவருக்கும் ITM” திட்டத்தில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சரின் திறனறி தேர்வு, திட்டத்தை நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திறனறி தேர்வு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 1000 மாணவர்களுக்கு, அவர்கள் 12ம் […]