சேலம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைவழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன. பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி […]
school
பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் சார்பாக வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி தொடர்பான கல்வித் தகவல்கள் 2021-2022 அறிக்கையின்படி நாடு முழுவதும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் இதர வகுப்பின மாணவர்களுக்கான பிரிமெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொகுப்பு […]
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைய உள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான, 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி துவங்கி நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக இன்று வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வு, இன்றுடன் நடைபெற்று முடிய உள்ளது. தேர்வினை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர். விடைத்தாள் திருத்தும் மையமாக அமைக்கப்பட்டுள்ள […]
திருநங்கையாக மாறிய மாணவி தான் படித்த பள்ளிக்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆறு பேர் பலியான சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள நாஸ்வில்லே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கிறிஸ்தவ பள்ளியில் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். […]
மாணவர்கள் உதவித் தொகை பெற கட்டாயம் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2022-23 ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணாக்கர்களின் வங்கி கணக்கு எண், ஆதாருடன் இணைக்கப்படுவது கட்டாயமாகும். […]
மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிருஸ்தவ பள்ளி, முதல்வரின் அறையில் திடீர் சோதனையின் போது மதுபானம் மற்றும் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சீல் வைக்கப்பட்டது. மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் சனிக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. குழு படுக்கைகள், மதுபானம் மற்றும் ஆணுறைகள் மற்றும் முட்டை தட்டுகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தது. “காஸ் சிலிண்டர் மற்றும் மது பாட்டில்கள் உட்பட பிற ஆட்சேபனைக்குரிய […]
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் படித்தவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இது குறித்து பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. […]
அரசு மாதிரி பள்ளிகளில் திறன் அறிவு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது . இது குறித்து பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டில் உள்ள தலைசிறந்த கல்லூரியில் இடம் பெறுவதை இலக்காக கொண்டு நான் முதல்வன், செம்மை பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளி மாணவரும் உயர் கல்வி […]
சிறுபான்மையினர் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்மொழிக்கு பதிலாக அவரவர் தாய்மொழிகளில் தேர்வெழுத தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் , அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் 17-ம் தேதி முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, தங்கள் பள்ளியில் ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி […]
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் உதவித்தொகை பெற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் 30.01.2023 அன்று திறக்கப்பட்டது. இத்திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து (கல்லூரியில் பயில்பவர்கள் மட்டும்) புதிய […]