ஒரு காலத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தும், ஒழுக்கப்படுத்தியும் வளர்ப்பது இயல்பான ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அந்த நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தாலே சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்களையே தாக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. மறுபுறம், ஆசிரியர்களின் சிறிய கண்டிப்பைக் கூட மனதில் ஏற்றுக்கொள்ள முடியாமல் சில மாணவர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அதேபோல், […]

