சேலம் மாநகரில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வகையில் 10 மெகாவாட் திறன் கொண்ட ஆலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வெள்ளக்கல்பட்டி அருகே அரசுக்குச் சொந்தமான 92.49 ஏக்கர் நிலத்தில் திடக்கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பு ரூ.291 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

