பயங்கரவாதப் படைகளில் “மனித ஜிபிஎஸ்” என்று பிரபலமாக அறியப்படும் பாகு கான் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.. காஷ்மீரின் குரேஸ் பகுதியில் நடந்த என்கவுண்டரில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. சமந்தர் சாச்சா என்றும் அழைக்கப்படும் பாகு கான், 1995 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசித்து வந்தார்.. ஊடுருவலுக்கு மிகவும் பழமையான மற்றும் மிகவும் பயனுள்ள உதவியாளர்களில் ஒருவரான பாகு கான், நவ்ஷேரா நார் பகுதியில் […]

பஹல்காம் தாக்குதல் நடத்திய 3 பேரும் ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிவித்தார். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக தொடங்கப்பட்ட ‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் நேற்று பிற்பகல் மக்களவையில் தொடங்கியது. விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இன்று மக்களவையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தில் உள்துறை அமைச்சர் […]

அமர்நாத் யாத்திரைக்கு ஒரு வாரம் முன்னதாக, இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. ஆபரேஷன் பிஹாலி என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட இந்த என்கவுண்டர் பற்றிய தகவலை பாதுகாப்புப் படையினர் பகிர்ந்து கொண்டனர், இந்த நடவடிக்கை தற்போது பிஹாலி பகுதியில் நடந்து வருவதாகக் கூறினர். எனவே இந்த இடத்தின் பெயரே இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது. ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையின் இந்த […]