தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக சிறப்புப் பார்வையாளர்கள் நியமனம். தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. ஏற்கனவே தங்கள் பணியைத் தொடங்கியுள்ள சிறப்புப் பார்வையாளர்கள், பிப்ரவரி 2026-ல் இறுதி வாக்காளர் […]
SIR
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், கணக்கீட்டுப் படிவம் ஒப்படைக்க நாளை கடைசி நாளாகும். தலைமை தேர்தல் ஆணை யத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் டிசம்பர் 4-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், நாளை 11-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 6 கோடியே 40 லட்சத்து […]
தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என எஸ்ஐஆர் படிவங்களை திருப்பி கொடுக்காமல் இருக்கக் கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் இறந்தவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்காளர்களாக இருப்பவர்களை நீக்கும் நோக்கில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர […]
வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைக்கோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரை புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில், ‘ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியினை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்வதற்காக 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், […]
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் நவம்பர் 24 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. […]
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை குறித்து இன்று முதல் தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தர […]
பீகார் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) செயல்முறையின் இரண்டாம் கட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்த SIR நடவடிக்கை ஏற்கனவே 12 மாநிலங்களில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பூத் லெவல் அதிகாரிகள் (BLOs) ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதிக்கும் சென்று, வாக்காளர்களின் வீட்டுத் தரப்பில் நேரடியாக கணக்கெடுப்பு […]
வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவிட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு உதவி மையங்கள். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் பொருட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இப்படிவத்தை பூர்த்தி செய்து மீண்டும் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவங்கள் அனைத்தும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெரும்.வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவிட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு உதவி […]
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 11 லட்சம் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,11,61,947 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 95.39% சதவீதம் ஆகும்.தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் […]
வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆக உயர்வு.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தற்போது நடந்து வருகின்றன. இதில், உரிய திட்டமிடல் இல்லாமல், போதிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் அனைத்து நிலை […]

