யேமனின் வட பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது திங்கட்கிழமை சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரான் ஆதரவு பெற்ற குழுவிற்கும், சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரசுப் படைகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஜவ்ப் மாகாணத்தில் உள்ள மூலோபாய நகரமான ஹஸ்மில் உள்ள மத்திய சிறைச்சாலை […]

